Showing posts with label High Court Passport. Show all posts
Showing posts with label High Court Passport. Show all posts

Saturday, 21 June 2025

பாஸ்போர்ட் பெற மனைவிக்கு கணவரின் சம்மதம் தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்.

பாஸ்போர்ட் பெற மனைவிக்கு கணவரின் சம்மதம் தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்.

Tamil translation by V R Saravanan, Advocate, Puducherry, Cell 9994854777

பெண்கள் சுயமாக இயங்குவதை நிலைநிறுத்தும் தனது முந்தைய தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஒரு பெண்ணுக்கு தனது கணவரின் சம்மதம் அல்லது கையொப்பம் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் மேற்கோள் காட்டி, "கணவரின் கையொப்பத்தைக் கோருவது, ஒரு பெண்ணை தனது கணவனின் சொத்தாகக் கருதும் ஒரு பிற்போக்கு மனப்பான்மையைக் காட்டுகிறது" என்று கூறியுள்ளார். 

ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு தனது தனிப்பட்ட அடையாளத்தை இழக்க மாட்டார் என்றும், தனது சொந்த பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முழு சட்ட உரிமைகளையும் தக்க வைத்துக் கொள்கிறார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சென்னை வாசியான ரேவதி-க்கு பிராந்திய பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை செயலாக்குவதில் தாமதம் செய்ததால் அவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். தான் தனது கணவரிடமிருந்து பிரிந்துவிட்டதாகவும், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அதனால் அவரது கையொப்பத்தைப் பெறுவது சாத்தியமில்லை என்றும் ரேவதி விளக்கினார். அவரது விண்ணப்பம் அவரது கணவரின் கையொப்பத்துடன் இருந்தால் மட்டுமே முன்னோக்கி நகர முடியும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அத்தகைய தேவை சட்டத்தின் கீழ் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தினார். மேலும், கணவரின் சம்மதத்தை வலியுறுத்துவது ஆணாதிக்க சிந்தனையின் பிரதிபலிப்பு என்று விவரித்தார். பின்னர் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரிக்கு ரேவதியின் விண்ணப்பத்தை நான்கு வாரங்களுக்குள் செயலாக்கி அவரது பாஸ்போர்ட்டை வழங்க உத்தரவிட்டார்.

வழக்குகளை விரைவாக தீர்க்க புதிய திட்டம்மதுரை உயர்நீதிமன்றக் கிளை

வழக்குகளை விரைவாக தீர்க்க புதிய திட்டம்  மதுரை உயர்நீதிமன்றக் கிளை யானது, கிரிமினல் வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதற்காக, தானாகவே (suo motu...