மக்களை காக்க சட்டம் இயற்றுமா புதுச்சேரி அரசு : நுண்நிதி நிறுவனங்களின் கொடூர வசூலிப்பு:
இந்தியாவில் நுண்நிதி (Microfinance) என்பது ஏழைகளுக்கும், வங்கிச் சேவைகளில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கும் நிதி
சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு
முன்மாதிரியாகும். ஆனால்,
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற
மாநிலங்களில், நுண்நிதி நிறுவனங்களின் கொடூரமான கடன்
வசூலிப்பு முறைகள் பலரின்
உயிர்களைப் பறிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளன. தற்பொழுது ரவுடிகளை வைத்து
வசூல்
செய்ய
துவக்கியுள்ளது. கடன்
திருப்பிச் செலுத்த முடியாமல் திணறும் குடும்பங்கள் தற்கொலை செய்து
கொள்வதும், வசூலிப்பாளர்களின் மிரட்டல்களுக்கு ஆளாகுவதும் ஒரு
பெரிய
சமூகப்
பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
அதிகரிக்கும் தற்கொலைகள்:
கர்நாடகாவில் அதிகரித்த உயிரிழப்புகள்:
2025
ஆம்
ஆண்டில், கர்நாடகாவில் நுண்நிதி நிறுவனங்களின் அச்சுறுத்தல்களால் 15 பேர்
தற்கொலை செய்து
கொண்டனர். இது
2024-ல்
பதிவான
7 உயிரிழப்புகளையும், 2023-ல் நிகழ்ந்த 5 தற்கொலைகளையும் விட
கணிசமான அதிகரிப்பாகும் கவலைக்குரியது. கர்நாடக உள்துறை அமைச்சர் இந்த
புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆந்திராவின் துயரம்:
2010-ல் ஆந்திரப் பிரதேசத்தில் நுண்நிதி நிறுவனங்களின் கொடூர
வசூலிப்பு முறைகளால் 70 முதல்
200 பேர்
வரை
தற்கொலை செய்து
கொண்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன்
விளைவாக, மாநில
அரசு
அவசரநிலை சட்டங்களைப் பயன்படுத்தி கடுமையான ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தியது.
புதுச்சேரி - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பிரச்சினைகள்:
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நுண்நிதி நிறுவனங்களின் கொடூர
வசூலிப்பு தொடர்பான புகார்கள் தொடர்ந்து வருகின்றன. கடன்
வட்டி
மற்றும் தொடர்
அழுத்தம் காரணமாக பலர்
உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்திலும் நுண்நிதி நிறுவனங்களின் கொடூர
வசூலிப்பு தொடர்பான புகார்கள் தொடர்ந்து வருகின்றன, ஆனால்
அவர்கள் மீது
இது
வரை
எந்த
காவல்
நிலையத்திலும் வழக்கு
பதிவு
செய்யப்படவில்லை.
கொடூர வசூலிப்பு முறைகள்: குற்றச்சாட்டுகள்
நுண்நிதி நிறுவனங்கள் கடனை
வசூலிக்க பின்பற்றும் முறைகள் கடுமையானவை மற்றும் மனிதாபிமானமற்றவை என
பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவற்றில் சில
1) பொது
அவமானப்படுத்துதல் – கடன்
வாங்கியவரின் வீடு
அல்லது
பணியிடத்தில் சென்று,
மற்றவர்கள் முன்னிலையில் அவரைத்
தாழ்த்துவது. 2) மிரட்டல் மற்றும் வசைமொழி – கடன்
வாங்கியவர்களை வாய்மொழியாக மிரட்டுதல், தகாத
மொழியில் பேசுதல். 3) உடைமைகளை கைப்பற்றுதல் – வீட்டுப் பொருட்களை பறிக்க
முயற்சித்தல். 4) ஓய்வில்லா தொந்தரவு – தினசரி தொலைபேசி அழைப்புகள், வீட்டைச் சுற்றி
கூட்டம் கூடுதல்.
ஏன் இந்த நெருக்கடி? – முக்கிய காரணங்கள்
புதுச்சேரி மாநிலத்தில் 9 ஆண்டுகாலமாக குறைத்தபட்ச ஊ
தியம்
உயத்தப்படவில்லை, இதனால்
வாக்கும் சக்தி
இழந்து
அதிகப்படியான கடன்
சுமையில் சிக்கி பலர் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கடன்
வாங்கி,
கடன்
சங்கிலியில் சிக்குகின்றனர். கிராமப்புற மக்களுக்கு கடன்
விதிமுறைகள் மற்றும் வட்டி
விகிதங்கள் புரியவில்லை.
உயர் வட்டி
விகிதங்கள் – நுண்நிதி கடன்களின் வட்டி
18% முதல்
26% வரை
உள்ளது,
இது
வங்கிகளை விட
அதிகம்.
மத்திய
வருவாய் குடும்பங்கள் நுகர்வுக்கான கடன்
பெறுகிறார்கள் – வருமானம் ஈட்டும் நோக்கில் கடன்
வாங்கியவர்கள் அதை
அன்றாட
செலவுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
மக்களை காக்கும் புதிய சட்டங்கள்
கர்நாடகாவின் புதிய சட்டம் (2025):
கர்நாடகா நுண்
கடன்
மற்றும் சிறு
கடன்
(கட்டாய
நடவடிக்கைகளைத் தடுக்கும்) சட்டம்,
2025 ஐ
அறிமுகப்படுத்தியது. கொடூர
வசூலிப்பு முறைகளுக்கு 10 ஆண்டுகள் சிறை
மற்றும் ₹5 லட்சம்
அபராதம் விதிக்கப்படும். பதிவு
இல்லாத
கடன்
வழங்குபவர்களின் கடன்களை ரத்து
செய்யும் தீர்மானம். கர்நாடகாவின் இந்த
நடவடிக்கை நுண்நிதி தொந்தரவுகளால் ஏற்பட்ட தற்கொலைகள் அதிகரித்ததற்கு நேரடி
பதிலடியாக வந்தது.
ஆந்திரப் பிரதேசம்:
ஆந்திரப் பிரதேசம் 2010 இல்
ஆந்திரப் பிரதேச
நுண்நிதி நிறுவனங்கள் (பணக்
கடன்
வழங்குதல் ஒழுங்குமுறை) அவசரசட்டம், 2010 ஐ இயற்றியது, இது
பின்னர் ஒரு
சட்டமாக மாறியது. மாநிலத்தில் பல
தற்கொலைகளால் ஏற்பட்ட கடுமையான நுண்நிதி நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக
இது
ஒரு
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். இது
வசூலிப்பு நடைமுறைகள், வட்டி
விகிதங்கள் மற்றும் பல
கடன்கள் வழங்குதல் ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை விதித்தது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் புதிய
சட்டத்தை இயற்றியுள்ளது. ஏப்ரல்
2025 இல்,
தமிழ்நாடு சட்டமன்றம் பணக்
கடன்
வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய
நடவடிக்கைகளைத் தடுக்கும்) சட்டம்
ஐ
ஏற்றுக்கொண்டது. கொடூர
வசூலிப்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை
தண்டனை
விதிக்கப்படும். தற்கொலைக்கு தூண்டிய நிறுவனங்கள் மீது
கடும்
நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச்
சட்டம்
"கட்டாய
நடவடிக்கை" என்பதை தொடர்ச்சியான பின்தொடர்தல்கள், நள்ளிரவு அழைப்புகள் அல்லது
எழுத்துப்பூர்வ அனுமதி
இல்லாமல் மூன்றாம் தரப்பு
முகவர்களைப் பயன்படுத்துதல் என
விரிவாக வரையறுக்கிறது.
ரிசர்வ் வங்கியின் பங்கு:
NBFC-MFIs (நுண்நிதி நிறுவனங்கள்) மீது
கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. வட்டி
விகிதங்கள், கடன்
நடைமுறைகள் மற்றும் புகார்
தீர்வு
முறைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
நுண்நிதி என்பது
வறுமையை ஒழிப்பதற்கான ஒரு
சக்திவாய்ந்த கருவியாக இருக்க
கொண்டுவரப்பட்டது. ஆனால்,
கொடூர
வசூலிப்பு முறைகள் மற்றும் அதிக
வட்டி
விகிதங்கள் இதை
ஒரு
சமூக
அபாயமாக மாற்றியுள்ளன. அரசு
மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும். மேலும்,
நிதி
அறிவு
கல்வியை ஊக்குவிப்பதன் மூலம்,
கடன்
வாங்குபவர்கள் சுயாதீனமாக முடிவுகளை எடுக்க
உதவ
வேண்டும். "கடன் வாங்குவது உரிமை,
ஆனால்
அதை
வசூலிப்பது கொடூரமாக இருக்கக்கூடாது!"
இந்திய ரிசர்வ் வங்கி
(RBI) பெரிய,
முறையான NBFC-MFIs-களை ஒழுங்குபடுத்தினாலும், பதிவு
செய்யப்படாத கடன்
வழங்குநர்கள் மற்றும் கட்டாய
வசூலிப்பு நடைமுறைகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க மாநில
அரசுகள் அடிக்கடி தலையிடுகின்றன. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவை
நுண்நிதி தொந்தரவுகளில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்க வலுவான
சட்ட
நடவடிக்கைகளை எடுத்துள்ள சமீபத்திய மாநில
அரசுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும், அண்டை
மாநிலத்தை போல
புதுச்சேரி அரசு
ஏழை,
எளிய
நடுத்தர மக்களை
பாதுகாக்க புதிய
சட்டம்
இயற்ற
வேண்டும்.
கட்டுரை
இரா.சரவணன்,
மாவட்ட செயலாளர்,
அகில இந்திய
வழக்கறிஞர்கள் சங்கம்
புதுச்சேரி
CELL:- 9994854777
No comments:
Post a Comment